Sunday, September 26, 2010

Known universe

small wonder - the game show pt 1

Surabhi Episode 1 Part 1

இரு பாதைகள்- ஒரு தீர்மானம்

தன் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கிய கட்டத்தில் தான் நடந்து வந்த பாதை இரண்டாகப் பிரிந்தது என்று ஆங்கில மகாகவி ராபர்ட் ஃப்ரோஸ்ட் பாடிய காலத்தை வென்ற கவிதை சிலருக்கு நினைவிருக்கலாம். அந்த இரண்டு பாதைகளில் எந்தப் பாதையில் செல்வது என்ற குழப்பம் அன்று அந்தக் கவிஞனுக்கு வந்தது. ஒன்று பலரும் நடந்து போன பாதையாகத் தெரிந்தது. இன்னொன்று அதிகம் பேர் நடந்து போகாத தடமாகத் தெரிந்தது. பாதையைத் தேர்ந்தெடுத்த பின் மாற்றிக் கொள்வது சாத்தியமல்ல என்பதால் அவர் நிறைய யோசித்தார். முடிவில் அதிகம் பயணிக்காத பாதையைத் தேர்ந்தெடுத்ததாகவும் அதுவே வாழ்க்கையில் எல்லா வித்தியாசத்தையும் ஏற்படுத்தியதாகவும் ராபர்ட் ஃப்ரோஸ்ட் கூறினார்.

அது போல ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டம் ஒரு பிரபல தமிழர் வாழ்வில் வந்தது. அவர் ஒரு விஞ்ஞானி. அமெரிக்காவில் ஒரு மிக நல்ல உத்தியோகத்தில் இருந்தார். அவர் குடும்பமும் அமெரிக்காவில் தான் இருந்தது. அவர் ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சியில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். அது குறித்து நிறையவே அறிந்திருந்தார். ஒரு முறை இங்கிலாந்து சென்ற போது அது போன்ற ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் அங்குள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனர் ஒருவரிடம் அது குறித்து நிறைய பேசினார். அவருடைய கருத்துகளால் கவரப்பட்ட அந்த இயக்குனர் அவர்களுடைய ஆராய்ச்சிக் கூடத்தில் சந்தர்ப்பம் கிடைத்தால் அது குறித்து ஆராய்ச்சி செய்ய தமிழ் விஞ்ஞானியை அனுமதிப்பதாகச் சொன்னார். சில மாதங்கள் கழித்து, 1999ஆம் ஆண்டு அவருக்கு அனுமதிக் கடிதமும் அனுப்பினார்.

அந்தக் கடிதம் பார்த்த பிறகு ஆங்கிலக் கவிஞன் ராபர்ட் ஃப்ரோஸ்ட் போலவே நம் தமிழ் விஞ்ஞானியும் குழப்பத்தில் ஆழ்ந்தார். அவர் அப்போது அமெரிக்காவில் நல்ல சம்பளத்துடன் வசதியாக இருந்தார். ஆராய்ச்சிக்கு இங்கிலாந்துக்கு சென்றால் அமெரிக்காவில் கிடைக்கும் சம்பளத்தில் கிட்டத்தட்ட அறுபது சதவீதமே அவருக்கு ஊக்கத் தொகை கிடைக்கும். குடும்பத்தை அவர் அழைத்துச் செல்ல முடியாததால் குடும்பத்தினரை அவர் பிரிய வேண்டி வரும். மேலும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் செய்யப் போகும் ஆராய்ச்சி எந்த அளவு வெற்றி பெறும் என்பதும் உறுதியில்லை.

இப்படி நஷ்டங்கள் பல, லாபம் உறுதியில்லை என்ற பாதையில் செல்வதா? எந்த பிரச்னையும் இல்லாத, எதையும் இழக்க வேண்டியிராத பாதையில் செல்வதா என்ற கேள்விகள் அவர் மனதில் எழுந்தன. அந்த ஆராய்ச்சி அவர் மிகவும் விரும்பிய ஆராய்ச்சி, அந்த சந்தர்ப்பம் அவருடைய கனவை நனவாக்கும் சந்தர்ப்பம்..... கனவை இழந்து மற்ற அனைத்தையும் தக்க வைத்துக் கொள்வதா? மற்ற அனைத்தையும் தக்க வைத்துக் கொள்ள கனவை இழப்பதா?

பொதுவாக பிழைக்கத் தெரிந்தவர்களாகக் கருதப்படுபவர்கள் கனவை இழந்தாவது மற்றவற்றை தக்க வைத்துக் கொள்வார்கள். அவருடைய நண்பர்கள் சிலரும் அந்த நல்ல வருமானத்தை விட்டு குறைந்த வருமானத்திற்குச் செல்வது முட்டாள்தனம் என்றே சொன்னார்கள். ஆனால் நம் விஞ்ஞானியோ குடும்பத்தாருடன் கலந்தாலோசித்து கனவைத் தக்க வைத்துக் கொள்ளும் குறைவான நபர்கள் செல்லும் அந்தப் பாதையில் பயணிக்கத் தீர்மானித்தார். மிக நல்ல வருமானத்தை தியாகம் செய்து, குடும்பத்தினரைப் பிரிந்து ஆராய்ச்சி செய்யக் கிளம்பி விட்டார். சரியாகப் பத்து வருடங்கள் கழித்து 2009ல் வேதியியலில் நோபல் பரிசை அந்த ஆராய்ச்சி அவருக்கு வாங்கித் தந்தது. ஆம் அந்த விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள் தான்.

நம் ஒவ்வொருவர் வாழ்க்கைப் பயணத்திலும் அதே போல சில கட்டங்கள் வருவதுண்டு. முன்னே பாதைகள் இரண்டாய் பிரிவதுண்டு. அந்த சமயத்தில் எந்தப் பாதையில் பயணிப்பது என்ற தீர்மானத்தை வைத்தே நம் விதி தீர்மானிக்கப்படுகிறது. எத்தனையோ சந்தர்ப்பங்களில் இருக்கின்ற சில சில்லறை சௌகரியங்களைத் தியாகம் செய்யாமல் கனவுகளை யாரும் நனவாக்க முடியாது. நம் உண்மையான கனவுகளைத் தியாகம் செய்து நாம் நிரந்தரமான சாதனைகளை சாதித்து விட முடியாது. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அமெரிக்க வேலையிலேயே தொடர்ந்திருந்தால் உலகத்திற்கு அவர் பெயர் அறிமுகமாகி இருக்க முடியாது.

அப்படி குறைவான மனிதர்கள் தேர்ந்தெடுக்கும் பாதையில் தோல்வியின் ஆபத்தும் நஷ்டத்தின் ஆபத்தும் இருக்கத் தான் செய்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பொறுப்பான மனிதராக அது வரை வாழ்ந்தவர்கள் கனவின் பாதையில் செல்லும் போதும் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதில்லை. சில்லறை அசௌகரியங்களை சந்திக்க நேர்ந்த போதும் முட்டாள்தனமாக அவர்கள் நடந்து கொள்வதில்லை. அவர்கள் உழைப்பு கூடுகிறதே ஒழிய குறைவதில்லை. எனவே சற்று தாமதமானாலும் வெற்றி கண்டிப்பாக அவர்களுக்கு வந்தே தீரும். அவர்கள் ஈடுபடுவது சூதாட்டத்தில் அல்ல. சோம்பலிலும் அல்ல. கனவுகளோடு சூதும், சோம்பலும், முட்டாள்தனமும் சேர்ந்தால் தான் கனவு பொய்க்கும்.

அப்படி வாழ்க்கையை இழந்த நபர் ஒருவரையும் நான் நன்றாக அறிவேன். அவர் அரசாங்க உத்தியோகஸ்தர். நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்தவர். பங்கு (shares) வணிகத்தில் ஈடுபாடு அதிகமாகிய அவருக்கு ஒருகட்டத்தில் வாங்குகிற சம்பளம் பிச்சைக்காசு என்ற அபிப்பிராயம் வந்து விட்டது. வேலையை ராஜினாமா செய்து விட்டு கிடைத்த பணம் அத்தனையையும் அதில் போட்டு ஆறே மாதத்தில் எல்லாம் தொலைத்து நடுத்தெருவில் நின்ற அவலத்தை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

ராமகிருஷ்ணனுக்கும், அவருக்கும் என்ன வித்தியாசம்? நல்ல வேலையில் ஈடுபடுபவனுக்கும், சூதாடுபவனுக்கும் இடையே இருக்கிற வித்தியாசம். நீண்டகாலக் கனவாக இருந்த ஒரு ஆராய்ச்சியைச் செய்யக் கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல் தொடர முயற்சித்த ஒரு வெற்றியாளனுக்கும், குறுகிய காலத்தில், கஷ்டப்படாமல் நிறைய சம்பாதிக்க முயன்ற ஒரு சோம்பேறி தோல்வியாளனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் தான். இந்த வித்தியாசங்களை யாரும் அலட்சியப்படுத்தி விடக்கூடாது.

உங்கள் வாழ்விலும் எப்போது வேண்டுமானாலும் செல்கின்ற பாதை இரு பாதையாகப் பிரியலாம். அப்போது எல்லோரும் பயணிக்கிற பாதையில் செல்வதே பாதுகாப்பு என்று தோன்றலாம். ஆனால் மற்ற பாதை உங்கள் கனவின் பாதையாக இருக்குமானால், சோம்பலாலும், பொறுப்பற்ற தன்மையாலும் நீங்கள் உந்தப்படாதவராக இருப்பவரானால், யாரும் அதிகம் போகாத பாதையானாலும் அந்தப் பாதையே நல்லது. அதில் உற்சாகத்துடன் செல்லுங்கள், உழைக்கத் தயாராகச் செல்லுங்கள். உங்கள் கனவு நனவாவது மட்டுமல்ல, நீங்கள் வாழ்வதன் பொருளை அந்தப் பாதையில் தான் உணர முடியும்.

-என்.கணேசன்

6 As of SUCCESS

எது வெற்றி? வெற்றியை நிர்ணயிக்கும் அம்சங்கள் என்ன? என்ற கேள்விகளுக்கு பதிலை மிக எளிமையாகவும், தெளிவாகவும், சுருக்கமாகவும் சுவாமி தேஜோமயானந்தா விளக்கி இருக்கிறார். வெற்றியடைய தேவையென அவர் கூறும் ஆறு அம்சங்கள் இதோ-

6 As of SUCCESS

The subject can be explained in many ways. The common definition of Success is - to gain what one seeks. E.g. in cricket, if a bowler gets a wicket, he is successful; if a batsman scores a century, he is successful. However, such success is not always admirable - pickpockets, terrorists - they may be successful, but such success is not considered good.

In the Ramayana, Ravana kidnapped Sita and had a fight with Jatayu on his way to Lanka. Even though Jatayu failed in his attempt to save Sita, his failure is considered a success as compared to Ravana's success in taking away Sita. Though Ravana achieved temporary success in kidnapping Sita, in reality he failed because he was unable to make Sita his wife.

True success depends more on inner means than outer means. The six A:s of success are:

1. Aptitude
Natural interest in a particular field. Somebody has an aptitude for music; somebody for arts; another for business; yet another for sports, etc. Some have an aptitude for aptitude tests! If you have the aptitude for something, concentration is natural in that field.

2. Aspiration
Enthusiasm in the mind. One-may have the aptitude, but one may not feel like doing the work at hand.

3 . Ability
One may have the enthusiasm to sing, but if there is no ability, it is torture for the listeners.

4. Application
One should be able to apply one's mind at any piece of work. Being focussed is a very important ingredient of success, whatever the field.

5 . Attitude
When the going gets tough, it is the tough who keeps going. Never get demoralised. Attitude determines the altitude - the heights to which you can go. Such a person sees an opportunity even in difficulty.

6. Altar of dedication
In life, if you have an altar, your life will alter. e.g. Mahatma Gandhi - an ordinary person underwent a complete transformation because of just one goal- the nation's independence. Generally, people work for filling up the stomach; some for money; others for power; there are others who serve the nation; devotees do everything for the Lord.

Success is not the final destination. Life is a journey - keep moving ahead. Sometimes, in life I don't get what I like. At such times I must like what I get. If you apply your mind, you will enjoy. Put in more effort in that which you find boring; cultivate a taste for it. Ultimately, understand that 'to act alone is in our hands'.

- Swami Tejomayananda

The Law of Giving

பெறுவது இலாபமானனதென்றும், தருவது இழந்து விடுவதென்றும் பலரும் நினைப்பதுண்டு. ஆனால் தருவதே பெறுவதற்கான வழி என்பதே இயற்கையின் நியதி. இன்னும் சொல்லப்போனால் தருவதையே பலமடங்காகப் பெறுகிறோம். பெற்றதெல்லாம் முன்பு தந்தவையே. இனிப் பெறப் போவதும் இப்போது தருவதையே. தருவது என்றால் அது பணமும், பொருள்களும் தான் என்பதல்ல எண்ணங்களால், சொற்களால், செயல்களாலும் எத்தனையோ பிறருக்குத் தர இயலும் என்றும், தருவது எல்லாம் எப்படி திரும்ப வருகிறது என்றும் மிக அழகாக தீபக் சோப்ரா விளக்குகிறார். படித்துப் பயன் பெறுங்களேன்.

The Law of Giving

In every seed is the promise of thousands of forests. But the seed must not be hoarded; it must give its intelligence to the fertile ground. Through its giving, its unseen energy flows into material manifestation.

The more you give, the more you will receive, because you will keep the abundance of the universe circulating in your life. In fact, anything that is of value in life only multiplies when it is given. That which doesn.t multiply through giving is neither worth giving nor worth receiving. If, through the act of giving, you feel you have lost something, then the gift is not truly given and will not cause increase. If you give grudgingly, there is no energy behind that giving.

It is the intention behind your giving and receiving that is the most important thing. The intention should always be to create happiness for the giver and receiver, because happiness is life-supporting and life-sustaining and therefore generates increase. The return is directly proportional to the giving when it is unconditional and from the heart. That is why the act of giving has to be joyful . the frame of mind has to be one in which you feel joy in the very act of giving. Then the energy behind the giving increases many times over.

Practicing the Law of Giving is actually very simple: if you want joy, give joy to others; if you want love, learn to give love; if you want attention and appreciation, learn to give attention and appreciation; if you want material affluence, help others to become materially affluent. In
fact, the easiest way to get what you want is to help others get what they want. This principle works equally well for individuals, corporations, societies, and nations. If you want to be blessed with all the good things in life, learn to silently bless everyone with all the good things in life.

The best way to put the Law of Giving into operation - to start the whole process of circulation - is to make a decision that any time you come into contact with anyone, you will give them something. It doesn.t have to be in the form of material things; it could be a flower, a compliment, or a prayer. In fact, the most powerful forms of giving are non-material. The gifts of caring, attention, affection, appreciation, and love are some of the most precious gifts you can give, and they don.t cost you anything.

When you meet someone, you can silently send them a blessing, wishing them happiness,joy, and laughter. This kind of silent giving is very powerful.

One of the things I was taught as a child, and which I taught my children also, is never to go to anyone.s house without bringing something . never visit anyone without bringing them a gift. You may say, .How can I give to others when at the moment I don.t have enough myself?.

You can bring a flower. One flower. You can bring a note or a card which says something about your feelings for the person you.re visiting. You can bring a compliment. You can bring a prayer.

Make a decision to give wherever you go, to whomever you see. As long as you.re giving,you will be receiving. The more you give, the more confidence you will gain in the miraculous effects of this law. And as you receive more, your ability to give more will also increase.

- Deepak Chopra

இயற்கையும் மனிதனும்

ஒரு சராசரி மனிதனின் இதயம் ஒரு நாளுக்கு 1,03,689 முறை துடிக்கிறது. அவனுடைய ரத்தம் ஒரு நாளில் 16,80,00,000 மைல்கள் பயணம் செய்கிறது. அவன் 70,00,000 மூளை செல்களைப் பயிற்றுவிக்கிறான். 438 கனஅடி காற்றை உள்ளே இழுக்கிறான். 23,000 தடவை சுவாசிக்கிறான். 750 தசைகளை அசைக்கிறான். ஒன்றரைக் கிலோ உணவை உட்கொள்கிறான். ஆனால் இத்தனையையும் செய்வதில் அவனுக்குக் களைப்போ, தளர்ச்சியோ ஏற்படுவதில்லை. காரணம் இவை எல்லாம் அவன் முயற்சியில் நடப்பதில்லை. தன்னிச்சையாகவே நிகழ்கின்றன.

இந்தச் செயல்கள் ஒவ்வொன்றையும் மனிதன் தானாக பிரக்ஞையோடு செய்ய வேண்டுமென்றால் மனிதன் ஒரு நாள் கூட வாழ முடிவது சந்தேகமே. அவனுக்குள்ளே இயற்கையாகவே இருக்கும் ஒரு கிரியா சக்தி இவை அனைத்தையும் பார்த்துக் கொள்கிறது. அனைத்தையும் சீராகவும், ஒழுங்கு முறையுடனும், தொடர்ந்தும் இவை நடக்கும்படியே அவன் படைக்கப்பட்டு இருக்கிறான்.

இயற்கையாக நடக்கும் இந்த செயல்களில் குளறுபடி இல்லாமல் போக இன்னொரு முக்கிய காரணம், இயற்கை தன் செயல்களை அடுத்தவருக்காகவோ, சாதனை புரிந்து காட்டுவதற்காகவோ, போட்டிக்காகவோ செய்வதில்லை. எதெல்லாம் அவசியமோ அதை மட்டுமே சீராக இயற்கை செய்கிறது. இன்னொரு இதயம் நூறு முறை அதிகம் துடிக்கிறது, நானா சளைத்தவன் இதோ இருநூறு முறை அதிகம் துடித்துக் காட்டுகிறேன் என்று எந்த இதயமும் போட்டி போட்டு துடிப்பதில்லை. அடுத்த மனிதனுடைய ரத்த ஓட்டத்தை விட ஆயிரம் மைல் அதிகம் நான் ஓடிக் காட்டுவேன் எந்த மனிதனுடைய ரத்த ஓட்டமும் வேகம் அதிகரித்துக் காட்டுவதில்லை.

இன்னொரு முக்கிய காரணம், தன் செயல்களை இயற்கை பெரிதாக நினைப்பதோ, அதனால் சலிப்படைவதோ இல்லை. தொடர்ந்து நூறு நாள் துடித்தாயிற்று, நான் என்ன எந்திரமா?, இரண்டு நாள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து இதயம் இயங்க முரண்டு பிடிப்பதில்லை. அது சக்தியுள்ள காலம் வரை தன் வேலையை ஒழுங்காகச் செய்ய முடிவது அதனாலேயே.

இயற்கை மனித உடல் இயக்கத்தில் இத்தனை சாதனைகளை சத்தமில்லாமல், ஆர்ப்பாட்டமில்லாமல் செய்கிறது. அவனாக அவன் பழக்க வழக்கங்களாலும், தவறான உணவுப் பழக்கங்களாலும் அந்த உடலைப் படாதபாடு படுத்துகிறான். அந்த உடலுக்குத் தேவையானதைத் தராமல், தேவையில்லாததைத் திணித்து அதன் எல்லா செயல்பாட்டுக்கும் ஏகப்பட்ட இடைஞ்சல்கள் செய்கிறான். அத்தனையையும் சமாளித்துக் கொண்டு அது முடிந்தவரை ஒழுங்காக இயங்கப் பாடுபடுகிறது.

மனிதன் தன் உடல் இயக்கத்தில் இருந்தே ஏராளமான பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். ஒழுங்குமுறை, சலிப்பின்மை, எல்லாத் தடைகளையும் மீறி சிறப்பாகச் செயல்படுதல் போன்றவை அந்தப் பாடங்களில் அடங்கும். இயற்கையின் செயலில் அவசரமில்லை. அதே நேரத்தில் தேக்கமும் இல்லை. தேவையானதை தேவையான வேகத்தில் செய்கிறது. இதுவும் மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய மிகப்பெரிய பாடம். மனிதன் இயற்கையைப் பின்பற்றுவது முடியாத காரியம் அல்ல. ஏனென்றால் அவனும் இயற்கையின் படைப்பே. இயற்கையோடு ஒட்டியும் தன் இயல்பை உணர்ந்தும் செயல்பட்டால் அவன் அடைய முடியாத சிறப்பில்லை.

இயற்கை இது வரை படைத்த பல்லாயிரக் கோடிக்கணக்கான மனிதர்களில் ஒருவர் போல் இன்னொருவரைப் படைத்ததில்லை. இது பிரமிப்பூட்டும் உண்மை. சமூகம் தான் சில சமயங்களில் எல்லோரையும் ஒரே வார்ப்பில் வார்த்து விடும் முயற்சியில் ஈடுபட்டு மனிதர்களைக் குழப்புகிறதே ஒழிய இயற்கை அந்த முட்டாள்தனத்தை இது வரை செய்ததில்லை. இயற்கையின் தனிப்பட்ட முத்திரை தனித்தன்மையே. இயற்கை மனித உடல் இயக்கங்களை ஒரே போல் உருவாக்கி இருந்தாலும் மற்ற விஷயங்களில் தன் தனி முத்திரையைப் பதித்தே அனுப்புகிறது.

ஒவ்வொரு மனிதனும் இயங்கத் தேவையான நுண்ணறிவை அவன் உடலுக்குத் தன்னிச்சையாக ஏற்படுத்தி உலகிற்கு அனுப்பி இயற்கை தன் பங்கைக் கச்சிதமாகச் செய்து விடுகிறது. இங்கு வந்த பின் வாழ வேண்டிய தன் பங்கை மனிதன் அதே கச்சிதத்துடன் செய்ய ஆறறிவையும் தந்து உதவியிருக்கிறது. அவனுக்குள்ளே தனித் திறமைகளையும் ஏற்படுத்தி அவன் பிரகாசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. மனிதன் பிரகாசிப்பதும், மங்கிப் போவதும் அவன் அந்தத் திறமைகளைப் பயன்படுத்தி வாழும் விதத்தில் தான் தீர்மானமாகிறது.

இயற்கையை ஒட்டி மனிதன் வாழும் போது, தெளிவாக ஆழ்ந்து சிந்திக்கும் போது தனக்குள்ளே இருக்கும் தனிச்சிறப்புகளை மனிதன் உண்மையாக உணர்கிறான். அப்படி உணரும் போது அதை வெளியே கொண்டு வர என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய முற்படுகிறான். விதைக்குள் இருக்கும் செடி வெளியே வராமல் வேறெங்கு போகும்? அவனாகவே அலட்சியப்படுத்தி அழிக்காத வரை எந்த திறமையும் அழிந்து போவதில்லை.


சரி இயற்கையை ஒட்டியோ, பின்பற்றியோ வாழ்கிற விதம் தான் என்ன? அதற்கு அடையாளங்கள் தான் என்ன? உங்கள் லட்சியங்கள் உங்கள் இயற்கையான இயல்பை ஒத்து இருப்பது, அவற்றில் ஈடுபடும் போது சலிப்பு தோன்றாமல் இருப்பது, அடுத்தவனுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பதை விட இதை நான் சாதித்து விட வேண்டும் என்ற எண்ணம் பிரதானமாக இருப்பது, சில்லறை அசௌகரியங்களைப் பெரிது படுத்தி குற்றச்சாட்டுகளைத் தயார் செய்வதை விட அதிகமாக அவற்றை நீக்கும் வழிகளை ஆராய்வது, அடுத்தவர்கள் சாதனைகளில் வயிறெரியாமல் இருப்பது, தன்னைப் போலவே அடுத்தவர்களையும் மதிப்பது, அடிக்கடி மனநிறைவை உணர்வது, விடாமுயற்சியுடன் உற்சாகமாக உழைப்பது இதெல்லாம் சில அடையாளங்கள்.

இயற்கையிடம் இருந்து கற்றுக் கொண்டு நாமும் இயற்கையாக சிறப்பாக வாழ்வோமா?

-என்.கணேசன்

Source : http://enganeshan.blogspot.com

Sunday, September 5, 2010

Enviro Meet July 2010





ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு சூழல் சந்திப்பு நிகழ்ச்சியைக் கடந்த 25.07.2010 ஞாயிறன்று மாலை 05:30மணியளவில் கோவை தமிழ்நாடு ஓட்டலில் நடத்தியது.

இதில் 'பல்லுயிர் பரவலில் கோவில் மரங்கள் (ஸ்தலவிருட்சங்கள்)' என்ற தலைப்பில் முனைவர் மா. குணசேகரன் சிறப்புரையாற்றினார்.

கோயில்கள் என்பன வழிபாட்டு இடமாக மட்டும் இல்லாமல் சமூகச் செயல்பாடுகளின் ஆலோசனை மையங்களாகச் செயல்பட்டு வந்தன. பழந்தமிழ் இலக்கியங்களில் கடிமரம் என்ற பெயரில் கோயில் தல மரங்கள் கூறப்பட்டிருக்கின்றன. இவை அந்தக் கோவிலின் மூலவருக்கு இணையாகவும் வைத்து வணங்கப் பட்டு வந்தன.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் 80% தலமரங்கள் உள்ளன. இவற்றில் வில்வம், வன்னி, மகிழம், அரசு, புன்னை ஆகிய மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. அழிவின் விளிம்பில் உள்ள ஈந்தை, அசோகம், சந்தனம் ஆகிய மரங்களும் இதில் அடங்கும்.

90 விதமான பறவைகளும், 37 விதமான பட்டாம்பூச்சிகளும், 13 வகையான ஊர்வன இனங்களும், 6 விதமான வவ்வால் வகையினங்களும் இந்த மரங்களில் வாழ்கின்றன.

தாமிரபரணி நதிக் கரையில் உள்ள திருப்புடை மருதூரில் தலமரத்தில் கூடுகட்டி வாழும் பறவைகளை அவ்வூர் மக்கள் பாதுகாக்கின்றனர். விழாக் காலங்களில் பட்டாசுகளை வெடிக்காமல் இருந்து அவை அந்த ஊரை விட்டுச் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

தலமரங்கள், மதரீதியான வழிபாட்டிற்கும், அழியும் நிலையில் உள்ள மர இனங்களைக் காத்து வைத்தல் என்ற நிலையிலும், மருந்தாகும் மதிப்புடைய மரங்களை அழிபடாமல் வைத்திருப்பது என்ற அடிப்படையிலும் முக்கியத்துவம் பெறுகின்றன.

நமது காடுகளில் தென்படாத பலவித மரங்களும் தலமரங்களாகக் கோவில்களில் இருப்பது அவற்றின் மீதான பாதுகாப்பு நடவடிக்கைகளை வேண்டி நிற்பதாய் உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் இரா. நிக்கோலஸ் வாழ்துரையற்றினார். குஜராத் மாநிலத்தில் ஆக்கிரமிப்புகளினாலும் சட்ட விரோத சுரங்க பணிகளினாலும் பாதிப்புக்கு உள்ளாகும் கிர் காடுகளை காப்பாற்ற பாடுபட்ட சுற்றுச்சூழல் போராளி அமித் ஜெத்வா சமூக விரோதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.

ஓசை அமைப்பின் சார்பில் சூழல் போராளி அமித் ஜெத்வாவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப் பட்டது. நிகழ்ச்சியில் ஓசைத் தலைவர் காளிதாசன், செயலாளர் அவைநாயகன், துணைத்தலைவர் கணேஷ் ஆகியோர் பங்கேற்றனர். பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பங்கேற்றனர்.



Source : greenosai