Wednesday, September 23, 2015

yenadhu kavithai


http://eluthu.com/user/index.php?user=udayan

http://eluthu.com/nanbarkal/udayan.html

Sunday, April 21, 2013

Today Is Earth Day April 22 2013

Earth Day is observed every year on April 22 to create awareness among the masses on environmental issues.

Events are held across the world to sensitize people about the need to protect our environment. 


http://www.earthday.org/2013/

http://timesofindia.indiatimes.com/tech/tech-news/internet/Google-celebrates-Earth-Day-2013-with-an-animated-doodle/articleshow/19672803.cms

Sunday, March 4, 2012

The Help (2011) --- நம்ம ஊரில் ஓடாது




1960 களில் ஜாக்சன் மிசிசிபியில் பட்டப்படிப்பு முடித்து எழுத்தாளர் கனவோடு வீட்டுக்கு திரும்பும்  யுஜீனியா அடிமைகள் போல வீட்டு வேலை செய்யும்  கறுப்பு இனபெண்களைப்பற்றி அவர்களின்  கண்ணோட்டத்தில்  ரகசியமாக   ஒரு புத்தகம் எழுதுவதே கதை...

ந்த படம் காதரின் ச்டாக்கெட்டின் புகழ் பெற்ற நாவலான The Help ஐ தழுவி எடுக்கப்பட்டது.  இந்த படம்  பார்க்கும்  முன் அந்த புத்தகம் கிடைத்தால் வாசி யுங்கள்.அது வெளிவந்த போது ஒரு  வெள்ளைப்பெண்   எவ்வாறு    கறுப்பர் களுக்கு  சாதகமாயிருந்து   அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும்அத்தனை வெள்ளைக் குழந்தைகளும் கறுப்பு ஆயாக்களால்  தான் வளர்க்கப் படுகின்றன என்றகசப்பான பல உண்மைகளையும்  வெளிக்கொணர்ந்து சர்ச்சைக்குள்ளானது.
றுபடி படத்துக்கு...படித்து முடித்து வீடு திரும்பும் 22 வயது  வெள்ளைப்  பெண்ணான   யுஜீனியாஎப்படியும் வீட்டு வேலை  செய்யும்  கறுப்பு இன பெண்களின் அவலக்கதைகளை வெளிக்கொணர ஏற்கனவே குழந்தையைஇழந்த எபலீன் மற்றும் அவரது நண்பி மின்னியை நெருங்குகிறார்...முதலில் தயங்கி பிறகு   இருவரும் தங்கள்வாழ்க்கையில் அனுபவித்த கொடுமைகளை யுஜீனியாவிடம் சொல்லத்தொடங்குகின்றனர்...
தை நகர நகர கறுப்பு இனப்பெண்கள் மீது கொடுமைகள் தொடர்கின்றன. அறுபதுகளில்  அவர்கள்  நாய்க்கு  சமமாய் நடத்தப்பட்டதையும் அவர்களின் அவலங்களையும் நாம் நமக்கு நடப்பது போல் உணர வைத்தது இந்த புது இயக்குனரின் வெற்றி.அந்த  மூன்று பெண்களும் நம்மை சிரிக்கவைத்து அழ வைத்து...படம் முடிந்து வெளியே வருகையில் யாருக்காவது எதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நம்மை நினைக்க வைப்பது இந்த புது இயக்குனரின்  மற்றொரு  வெற்றி...
டத்தில் வயதான  நடிகைகள் நடிப்பு கோலோச்சுகிறது...  மின்னியின்கொடூர முதலாளியம்மாவாக வரும் ஹில்லி (Bryce Dallas Howard )இந்த வருட ஆஸ்கார் விருதை தன் பாக்கெட்டில் இப்போதைக்கு வைத்திருக்கிறார்.எபலீனாக Viola Davis ...மின்னியாக  Octavia Spencer வந்து யுஜீனியாவிடம் ரகசியமாய்  தங்கள் அனுபவங்கள் பகிர்வது ஒரு மினி த்ரில்லர் பட அனுபவம் கூட...

Emma Stone யுஜீனியாக பலமுறை  விக் மாற்றி கஷ்டப்பட்டிருக்கிறார். அவருக்கு பதில் ஒரு   கறுப்பினப் பெண்ணைப்போட்டிருந்தால்...இன்னும் நல்லாயிருந்திருக்கும்.அதற்க்கு நாம் The Help புத்தகத்தை மாற்றி எழுத வேண்டியிருக்கும்.






கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம்.
source:reverienreality.

Saturday, February 25, 2012

Hornbill bird

கண்டேன் ஹோர்ந்பில் பறவை மருதமலையில் 

Tuesday, October 4, 2011

Enviro meet Sep 2011


OSAI organised an Enviro Meet for the International Year of Forests on September 25th, 2011 at Hotel Tamilnadu, Gandhipuram, Coimbatore. Rtn. Mr.S.Satish presided over the function. Dr.A.J.T.Johnsingh, the former Dean of Wildlife Institute of India, Deharadun gave special address on 'Conservation of Central Western Ghats'.





Google picassa

https://picasaweb.google.com/pasumaiosai10/EnviroMeetSeptember2011?feat=flashslideshow#5658408968624241714

copyright : greenosai

Sunday, September 18, 2011

கிராமங்கள் தமிழ்நாட்டில் இருக்கா

கிராமங்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது பச்சைப் பசேலென்று தோன்றும் வயல் வெளிகள், விவசாயிகளின் வாகனங்கள், ஆடுகள் , கோழிகள் , மாடுகள் , கருவேல மரங்கள், பசுமையான மரங்கள், கோவில் திருவிழாக்களில் நடை பெறும் பாரம்பரிய நடனங்கள் மற்றும் வில்லுப்பாட்டு ,மிதி வண்டியில் வைத்துச் செய்யும் சிறு வியாபாரங்கள் , வானொலி சத்தங்கள், மண் தெருக்கள் , சிறு குழந்தைகளின் விளையாட்டுச் சத்தங்கள் , தெரு தண்ணீர் குழாய்ச் சண்டைகள், குழுவாகக் கைத்தொழில் செய்யும் பெண்கள் , பெட்டிக் கடைகள் , மாசு இல்லாத இரம்மியமான காற்று, நீரோடைகளில் தண்ணீர் எடுக்கும் பெண்கள் , அன்பான உபசரிப்பு, வைக்கோல் போர்கள், மாலை நேரத்தில் விவசாய வேலைகளை முடித்து விட்டு வந்து உறவினர்களோடும் , குழந்தைகளோடும் பேசி மகிழ்ந்து தங்கள் களைப்பைப் போக்கும் ஆண்கள்,ஊரின் ஒரு மூலையில் குழுவாகக் கூடி நிற்கும் வாலிபர்கள், குடிசைகள் , ஒரு சில பெரிய வீடுகள்,கூட்டுக் குடும்பங்கள் , எப்போதும் நடமாட்டம் மிகுந்த வீதிகள், பிரச்சனைகளைத் தங்களுக்குளே பேசித்தீர்த்துக் கொள்ளுதல். இப்படியெல்லாம் இருந்த கிராமங்கள் இப்பொழுது தங்கள் பொழிவை மெல்ல மெல்ல இழந்து வருகின்றன.

கிராமங்களில் சிறுவர்கள் பள்ளிக்கூடம் சென்று வந்ததும் , மாலைவேலையில் மற்றும் விடுமுறை நாட்களிலும் காலமுறை விளையாட்டுகளை விளையாடுவார்கள் ,
எடுத்துக்காட்டாக கண்ணாம்மூச்சி,கம்பு குச்சி, நொண்டி அடித்தல் , கயிறு தாண்டுதல் ,பம்பரம் ,கோலிகுண்டு இது போன்ற விளையாட்டுகள் விளையாடப்பட்டன. ஆனால் இப்பொழுது பள்ளி சென்று திரும்பும் சிறார்கள் , தொலைக்காட்சி பெட்டியின் முன்னால் உட்கார்ந்து கொண்டு பொழுதைக் கழிக்கின்றார்கள். கிரிக்கெட் விளையாட்டை மட்டும் விளையாடுகிறார்கள். பழைய விளையாட்டுகளை மறந்து விட்டனர். பெற்றோர்களும் சிறார்களை வெளியே விட மறுக்கின்றனர். குழுவாகக் கைத்தொழில் செய்யும் பெண்களைப் பார்க்க முடியவில்லை, எல்லோரும் படிக்க ஆரம்பித்து விட்டதால் வீட்டில் ஆடு , மாடு , கோழிகள் வளர்ப்பதில்லை . அதை ஓர் இழி செயலாகப் பார்க்கிறார்கள். விவசாயத்தில் வருமானம் இல்லாத காரணத்தினால் , விவசாயம் குறைந்து விட்டது. விவசாய நிலங்கள் வீடுகளாக , வணிக வளாகங்களாக மாற்றப்படுகின்றன.


தெருக்கள் அனைத்தும் சிமெண்ட் தெருக்களாக மாற்றபட்டுவிட்டன , கோவில் திருவிழாக்களில் பழைய பாரம்பரிய நடனங்கள் மற்றும் வில்லுப்பாட்டு இல்லை ஆபாச நடனங்கள் அரங்கேறி வருகின்றன , வரும் உறவினர்களுக்கு அன்பான உபசரிப்பு இல்லை, வானொலி மாறி தொலைகாட்சிச் சத்தங்கள் , கூட்டுக் குடும்பங்கள் குறைந்து தனித் தனியாக வாழ ஆரம்பித்து விட்டனர். மிதிவண்டிகள் குறைந்து மோட்டார் வாகனங்கள் பெருகி உள்ளன . தங்களுடைய சொந்தங்களுக்குளே விட்டுக் கொடுக்கும் அல்லது உதவும் மனப்பான்மை இல்லாமை , எதிர்ப்பார்புகள் பார்த்து அன்பு செலுத்துகிற எண்ணம் ,படித்தவர்கள் எல்லாம் தங்கள் குடும்பங்களை விட்டு நகரங்களுக்குச் சென்று வேலை செய்தல் , வெறிச்சோடிய வீதிகள் இப்படியே கிராமங்கள் நகரத்தனமாக மாறி வருகின்றன.




கிராமங்களில் மாற்றப் பட செயல்கள் பல இருக்கின்றன , கிராமங்கள் வளர்வது நல்லதுதான் , என்றாலும் இங்கு மனதுக்கு நிறைவான காரியங்களும் , மனதுக்கு அமைதியான செயல்களும் பல இருந்தன . எதாவது ஒரு வீட்டில் நல்ல நிகழ்ச்சி என்றால் உறவினர்கள் எல்லாம் அந்த வீட்டில் ஒன்று கூடி தாங்களே சமைத்து விருந்து செய்வார்கள். ஆனால் நகரங்களில் நட்சத்திர உணவகங்களைத் தேட வேண்டியது இருக்கும். இங்கு உறவினர்களோடும் , நண்பர்களோடும் பேசி மகிழ்வதால் கேளிக்கை விடுதிகள் தேவை இல்லை. ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்பதால் மன அழுத்தம் இல்லை எனவே தியான மையங்கள் தேவைப்படுவதில்லை. கடுமையாக உடல் உழைப்பு இருப்பதால் உடற் பயிற்சிக்கூடம் தேவை இல்லை. இப்படியாக பல நல்ல நல்ல பழக்க வழக்கங்கள் இயற்கையாகவே அமைந்து இருந்த கிராமத்தில் மக்களின் ஒரு சில பிடிவாத குணங்களால் கிராமங்கள் தங்கள் தொண்மையை இழக்கின்றன.